அப்பா எழுதிய பாட்டை பாடிய ஸ்ருதிஹாசன்!

No comments
சிவாஜிகணேசன்-கமல்ஹாசன் இருவரும் அப்பா மகனாக நடித்த படம் தேவர்மகன். இந்த படத்தில் சிவாஜியை போற்றும்படியாக அமைந்த போற்றி பாடடி பெண்ணே என்ற பாடலை சில குழந்தைகளுடன் இணைந்து இளையராஜாவின் இசையில் பாடியவர் ஸ்ருதிஹாசன். அதிலிருந்து தொடர்ந்து பல இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி வந்த ஸ்ருதி, கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராகவும் பிரவேசித்தார்.
 அதையடுத்து நடிகை என்ற அரிதாரத்தை பூசிக்கொண்டபோதும், தொடர்ந்து பின்னணியும் பாடிவரும் ஸ்ருதி, தற்போது அஸ்ஸாமை சேர்ந்த ஜோய் பரூவா என்பவருடன் இணைந்து ஒரு இசை ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார். பல மொழிகளிலும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆல்பத்திலுள்ள பாடலை தற்போது தமிழ் மற்றும அஸ்ஸாம் மொழிகளில் பாடியுள்ளனர். 
 இதில் தமிழில் பாடல் எழுத கமலிடம், ஸ்ருதி கேட்டுக்கொண்டபோது, உடனே எழுதிக்கொடுத்து விட்டாராம். ஆக, கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், ஜோய்பரூவா ஆகிய மூவர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள அந்த மியூசிக் ஆல்பம், உலக அளவில் ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

No comments :

Post a Comment