ரஜினியின் காலா தலைப்புக்கு புதிய சிக்கலா...ஒரு பார்வை

No comments

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து பா.ரஞ்சித் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்திற்கு 'காலா' என பெயரிட்டு, First Look போஸ்டர்கள் வெளியானபோது இணையமே அதிர்ந்தது.

இந்த நிலையில் காலா என்ற தலைப்புக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. அந்த தலைப்பை யாரோ ஒரு தயாரிப்பாளர் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ளாராம், அது தெரியாமல் அந்த தலைப்பை வைத்துவிட்டனர்.

அந்த தயாரிப்பாளரிடமிருந்து காலா டைட்டிலை வாங்க தற்போது, தயாரிப்பாளர் தனுஷ் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.
புதுப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே தனது 164வது படத்தின் பெயரை அறிவித்துவிட்டார் ரஜினி. காலா கரிகாலன் என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்டது.

இந்த நிலையில் இப்படத்தில் தேசிய விருது வாங்கிய நான்கு பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

தனுஷ்- நடிகர் ஆடுகளம், தயாரிப்பாளர் காக்கா முட்டை, விசாரணை
ஸ்ரீகர் பிரசாத்- சிறந்த எடிட்டர் (7 முறை)
சமுத்திரக்கனி- சிறந்த துணை நடிகர் (விசாரணை)
அஞ்சலி படில்- ஸ்பெஷலாக நா பங்காரு தல்லி (தெலுங்கு)
இப்படி படத்தில் தேசிய விருது வாங்கிய கலைஞர்கள் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை
ரசிகர்களை கொண்டாட வைக்கும் வகையில் இன்று ரஜினி படத்தின் பெயர் வெளியாகி இருந்தது. ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு காலா கரிகாலன் என்று பெயரிட்டுள்ளனர்.

படத்திற்கு ஏன் இப்படி ஒரு பெயர் என ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கம் கொடுத்துள்ளார் ரஞ்சித்.

அவர் கூறியதாவது, காலா என்றால் காலன், எமன் என்று பொருள். கரிகாலன் என்பதன் சுருக்கமே 'காலா' என்று வைக்கப்பட்டுள்ளது. நெல்லை வட்டாரங்களில் எமனை 'காலா' சாமியாக வழிபடுவார்கள். மும்பையில் வசிக்கும் நெல்லை வட்டார மக்களின் வாழ்க்கையை சொல்வது தான் காலா படத்தின் கதை என்றார்.

ரஜினிக்கு மிகவும் பிடித்த பெயர் கரிகாலன். இந்த தலைப்பை நான் அவரிடம் தெரிவித்ததும் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது என்றும் கூறினார்.


 

No comments :

Post a Comment