தான் இறந்த செய்தியை செய்தித்தாழ்களில் படித்து தெரிந்து கொண்ட இயக்குனர் கபிலன் (Video)

No comments
திரைப்பட இயக்குனர் கபிலன் படம் வெளியாகாத விரக்தியில் தான் தற்கொலை செய்துகொண்டதாக வெளிவந்த தகவல்கள் வதந்தி என்று தெரிவித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் கபிலன் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.

மேலும் பல குறும்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் இவர் தான் தயாரித்த படங்கள் வெளியாகாத விரக்தியால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இணையதளம் ஒன்றில் பேட்டி அளித்த கபிலன், தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்த தகவல் வதந்தி என்று கூறியுள்ளார்.

தற்போது கலைந்த கனவுகள் என்ற படத்தின் படப்பிடிப்புக்கான வேலைகளை செய்து வருகிறேன் என்றும் இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் உண்மையிலேயே தற்கொலை செய்து கொண்டது கருவி படத்தை இயக்கிய கபிலன் தான் என்பதும், பெயர் குழப்பமே இதற்கு காரணம் என்றும் தெரியவந்துள்ளது.

No comments :

Post a Comment