தன்னுடைய ஆசை நிறைவேறிவிட்ட சந்தோஷத்தில் ரம்யாகிருஷ்ண‌ன்!

No comments
படையப்பாவில் நீலாம்பரியாக கலக்கிய ரம்யாகிருஷ்ணனுக்கு மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்காதா என்று எதிர்பார்த்திருந்தார். 

 இப்போது அவரது எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டதாம். நான் ஈ இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் அனுஷ்கா நடிக்கும் பாகுபலி எனும் சரித்திரப்படத்தில் ராஜமாதாவாக நடிக்கிறாராம். 

 படத்தின் கதையை நகர்த்தும் வில்லித்தனமான இந்த கதாபாத்திரத்திற்கு பல நடிகைகளை தேர்வு செய்து பார்த்த ராஜமௌலிக்கு, யாரும் சரிப்படாததால் படையப்பா நீலாம்பரி கதாபாத்திரம் ஞாபகம் வர உடனே ரம்யாகிருஷ்ணனை செலக்ட் செய்து விட்டாராம்

மொத்தத்தில் தன்னுடைய ஆசை நிறைவேறிவிட்டதால் குஷியில் இருக்கிறாராம் நீலாம்பரி.

No comments :

Post a Comment