ஷூட்டிங்கில் பரபரப்பு கடலில் விழுந்தார் சத்யன்

No comments
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படம், ‘நவீன சரஸ்வதி சபதம்’. ஜெய், நிவேதா தாமஸ், விடிவி கணேஷ், சத்யன், ராஜ்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தை இயக்கும் கே.சந்துரு கூறியதாவது: இது பேன்டசி காமெடி படம். கொஞ்சம் புதுமையாக முயற்சி செய்துள்ளோம். 

ஜெய் அவரின் நண்பர்கள், செவ்வாய்க்கிரகத்தில் இருந்து வரும் மனிதர், காதல், அவர்களுக்கான பிரச்னை என கதைபோகும். படத்தின் ஷூட்டிங் மலேசியாவில் உள்ள ரெடாங் தீவில் 25 நாட்கள் நடந்தது. கடலுக்குள் 4 மணிநேரம் படகில் சென்றால் அந்த தீவில் இரண்டு ரிசார்ட்ஸ் மட்டும் இருக்கும்.

 அங்கு படப்பிடிப்பு நடத்த சென்ற போது தீவுக்கருகில் கடலில் சத்யன் விழுந்துவிட்டார். எங்களுடன், பாதுகாப்புக்கு ஒரு போட் தினமும் வரும். சத்யனுக்கு நீச்சல் தெரியும் என்று பாதுகாப்புக்கு வந்தவர்கள் இருந்துவிட்டார்கள். சிறிது நேரம்வரை அவர் வெளியே வராததால் நாங்கள்தான் கூச்சல்போட்டு சத்யனை தேடச் சொன்னோம்.

 அவர்கள் சத்யனை மீட்டனர். இதனால் பயம் ஏற்பட்டது. பாதுகாப்புக்கு வந்தவர்கள் அவருக்கு சில சிகிச்சைகளை மேற்கொண்டனர். பிறகு படபிடிப்பில் கலந்துகொண்டார்.

No comments :

Post a Comment