காதலனை பிரியாதே... தோழிகள் அட்வைசால் தீபிகா குழப்பம்

No comments
காதலனை விட்டு பிரியாதே என்று தீபிகா படுகோனுக்கு தோழிகள் அட்வைஸ் தந்ததால் அவர் குழப்பத்தில் உள்ளார். கோச்சடையான் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் தீபிகா படுகோன். பாலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்கிறார். இவரும் ரன்வீர் சிங்கும் நெருங்கிய நட்புடன் பழகி வருகின்றனர்.


 இந்த நட்பு காதலாக மலரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபிகாவோ ரன்வீர் சிங்கை கழற்றிவிட முடிவு செய்திருக்கிறார். சமீபத்தில் இவர்கள் ஜோடியாக நடித்த ராம் லீலா படம் திரைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் புத்தாண்டு தினத்தன்று ரன்வீர், தீபிகா இருவரும் இரவு விருந்துக்காக நட்சத்திர ஓட்டலில் சந்தித்தனர். அப்போது தீபிகாவிடம் ரன்வீர் மனம் விட்டு பேசினார். தனது காதலையும் அவரிடம் தெரிவித்தார். 

ஆனால் அதை கண்டுகொள்ளாமல் வேறு விஷயத்தைபற்றி பேசுவதற்காக பேச்சை திசை மாற்றினார் தீபிகா. இதை புரிந்து கொண்ட ரன்வீர் அத்துடன் பேச்சை முடித்துக்கொண்டார். இதையறிந்த தீபிகாவின் நெருங்கிய நண்பர் களும், தோழிகளும் அவருக்கு அறிவுரை வழங்கி உள்ளனர். ரன்வீர் உன் மீது பைத்தியமாக இருக்கிறார். அவரது காதல் உண்மையானது. 

அவர் காதலை நீ ஏற்க வேண்டும். அவரைவிட்டு பிரியக்கூடாது என்று வற்புறுத்தினர். மேலும் ஏற்கனவே தீபிகாவுடன் நெருக்கமாக இருந்த ரன்பீர் கபூர், சித்தார்த் மல்லையா, யுவராஜ் சிங், நிஹர் பாண்டியா போன்றவர்களுடான காதல் தோல்வி அடைந்ததையும் சுட்டிக்காட்டி, உனக்கு ஏற்ற காதலன் ரன்வீர் சிங்தான் என்று வலியுறுத்தினர். இதையடுத்து ரன்வீரின் காதலை ஏற்பதா? மறுப்பதா? என்ற குழப்பத்தில் தீபிகா இருப்பதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது.

No comments :

Post a Comment