கமல்ஹாசனால் கணவருடன் சேர்ந்தேன்

No comments
கமல்ஹாசனும், கவுதமியும் உதவியதால் கணவருடன் மீண்டும் சேர்ந்தேன் என லிஸி தெரிவித்துள்ளார். தொழிலில் ஏற்பட்டப் பிரச்சனை மனவருத்தமாகி மணமுறிவுவரைச் சென்று கடைசி நிமிடத்தில் லிஸியும், ப்ரியதர்ஷனும் தங்களின் தாம்பத்தியத்தை காத்துக் கொண்டனர். இந்த சமாதான உடன்படிக்கைக்கு பின்னால் இருந்தவர்கள் கமலும், கவுதமியும். அவர்கள்தான் பேசி இருவரையும் இணைய வைத்துள்ளார்கள். 
அதேபோல் ப்ரியதர்ஷனின் நெருங்கிய நண்பர் மோகன்லாலும், அவரது மனைவியும் லிஸியும், ப்ரியதர்ஷனும் இணைய பலமுறை இருவரிடமும் பேசியுள்ளனர். 
 மனம்விட்டு பேசாததே தங்களின் கருத்து வேறுபாட்டுக்கு காரணம் என்று தெரிவித்திருக்கும் லிஸி, தங்களை சேர்த்து வைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment