கல்லூரி மாணவனாக நடிக்க மாட்டேன்! அஜீத் அதிரடி முடிவு!

No comments
நம்ம ஊர் ஹீரோக்கள் 50 வயதுக்கு பிறகும் காலேஜ் மாணவனாக நடித்த சம்பவமெல்லாம் நிகழ்ந்திருக்கிறது. அதையும் ரசிகர்கள் ஆர்வமாக கண்டுகளித்தார்கள். ஆனால், சமீபகாலமாக ரசிகர்கள் யதார்த்தங்களை ரசிக்கத் தொடங்கி விட்டனர். அதனால் நரைமுடி ஹீரோக்கள் கல்லூரிக்கு நோட்டு புத்தகங்களை தூக்கிக்கொண்டு போனாலோ, 16 வயசு வெடலப்பொண்ணுங்களை கட்டிப்புடித்து டூயட் பாடினாலோ இந்த வயசுக்குப்பிறகு இதெல்லாம் தேவைதானா என்று கமெண்ட் அடிக்கின்றனர். இதை சில ஹீரோக்கள் புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக நடந்த கொண்டாலும், இன்னும் சிலர் அதை தொடர்ந்து கொண்டுதான் வருகிறார்கள். அந்த வகையில், அஜீத் ரொம்பவே மாறி விட்டார்.
 அதாவது மங்காத்தாவில் இருந்து தனது வயதுக்கு பொருத்தமான கதாபாத்திரங்களாகவே நடித்து வருகிறார். அதோடு, தங்கள் வயதை சீக்ரெட்டாக சிலர் மறைத்து வைத்திருக்கும் வேளையில், அஜீத்தோ, தனது நிஜ வயதை ஓப்பனாக சொல்லியே நடிக்கிறார். 
 சமீபத்தில் ஒரு டைரக்டர் அவரிடம் கதை சொன்னபோது, அவரை கல்லூரி பையனாக நடிக்க வேண்டும் என்றாராம். ஆனால் அஜீத், அந்த மாதிரி சீனெல்லாம் வைக்காதீர்கள். எனக்கு எது பொருத்தமாக இருக்குமோ அதை மட்டும் செய்யுங்கள் என்று கூறி விட்டாராம். அதனால் அஜீத்தை இயக்கவிருக்கும் கெளதம் மேனன்கூட, அஜீத்தின் இந்த மனநிலை அறிந்து, அவர் விரும்பத்தகாத சில காட்சிகளை இப்போதே கத்தரித்து ஸ்கிரிப்ட் பண்ணியிருக்கிறாராம்.

No comments :

Post a Comment