கவர்னருக்கு எதிராக விமர்சனம்: சர்ச்சையில் ரீமா கல்லிங்கல்

No comments
கவர்னரை விமர்சித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் ரீமாகல்லிங்கல். இவர் தமிழில் யுவன் யுவதி படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். மலையாள டைரக்டர் ஆஷிக் அபுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கேரள கவர்னராக இருந்த நிகில்குமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய கவர்னராக ஷீலா தீட்சித் நியமிக்கப்பட்டு உள்ளார். அடுத்த வாரம் இவர் கேரள கவர்னராக பதவி ஏற்க உள்ளார். கேரளாவில் கவர்னர் பதவி ஏற்று தங்கி இருப்பதில் மகிழ்ச்சி அடைவேன் என்று தெரிவித்து உள்ளார். ஷீலாதீட்சித் டெல்லி முதல்–மந்திரியாக இருந்த போதுதான் அங்கு பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகம் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 
 பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் ஏன் வெளியே போகிறார்கள். அப்படி போவதால்தான் இதுபோல் பாலியல் வன்முறைகள் நடக்கிறது என்று ஷீலா தீட்சித் அப்போது பேசியதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. 
தற்போது கேரளாவுக்கு அவர் கவர்னராவதை விமர்சித்து ரீமா கல்லிங்கல் கருத்து தெரிவித்து உள்ளார். ‘‘கேரள கவர்னராக பதவி ஏற்க ஷீலா தீட்சித் வருகிறார். இனி கேரள பெண்கள் யாரும் மாலை 6 மணிக்கு மேல் வெளியே வரக்கூடாது என தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டு உள்ளார். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. காங்கிரசார் கண்டனங்கள் எழுப்பி வருகிறார்கள்.

No comments :

Post a Comment