பல்வேறு விருதுகளை குவித்த இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா மரணம்

No comments


பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

தேசிய விருதுகள், பத்ம விபூஷண், செவாலியே, சங்கீத கலாநிதி உட்பட பல விருதுகளை வென்றவர் இவர்.

சென்னை ஆர்.கே.சாலையில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது.

கர்நாடக இசை மாமேதை பாலமுரளி கிருஷ்ணா நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86. அவரது உடல் சென்னை கோபாலபுரம் கதீட்ரல் சாலையில் உள்ள கனகஸ்ரீ நகரில் இருக்கும் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில், இன்று மாலை அவரது இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று அவரது வீட்டார் தெரிவித்திருந்தனர். அதன்படி, இன்று மாலை 3 மணியளவில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது.

இந்த இறுதி ஊர்வலம் பெசன்ட் நகர் நோக்கி நகர்ந்து 3.50 மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தை அடைந்தது. பின்னர், அவரது உடலை மின் மயானத்தில் எரியூட்டினர். பால முரளி கிருஷ்ணாவின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


No comments :

Post a Comment