ஓவரா கிளாமர் காட்ட எனக்கு வராது : அமலாபால் சிறப்பு பேட்டி

No comments
வீரசேகரன், சிந்து சமவெளி என்று நடித்து வந்த அமலாபாலின் சினிமா கேரியரை மாற்றியது பிரபுசாலமனின் மைனா படம் தான். மைனா படம் தந்த வெற்றியால் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களை கைப்பற்றினார். விக்ரம், ஆர்யா என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் இப்போது விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கும் அமலாபால் அளித்த சிறப்பு பேட்டி இதோ…



* விஜய்யுடன் நடித்த அனுபவம் பற்றி?
ரொம்ப நல்ல அனுபவம். மிகப்பெரிய நடிகர் விஜய் ஆனால், அனைவரிடமும் ரொம்ப இயல்பாக, அன்பாக பழகினார். “தலைவா படப்பிடிப்பு இத்தனை சீக்கிரம் முடிந்து விட்டது என்று, நான் வருத்தப்படுகிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
* “தலைவாவில் இரண்டு ஹீரோயின்களாமே?
ராகினி என்ற மும்பை நடிகை ஒருவர் இருக்கிறார் என்றாலும், நான் தான் முதன்மை நாயகி. டூயட்டுக்கு மட்டும என்னை பயன்படுத்தாமல், வித்தியாசமான ‌‌கோணத்திலும் நடிக்க வைத்துள்ளனர். அந்த வகையில், “தலைவா எனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும்.

* தெலுங்கில் அதிக கிளாமராக நடிப்பதாக கூறப்படுகிறதே?
அப்படியெல்லாம் இல்லை. அங்குள்ள எல்லா நடிகைகளையும் போல் தான், நானும் நடிக்கிறேன். ஓவர் கிளாமர் என் உடம்புக்கு செட்டாகாது.
* “சிந்து சமவெளி மாதிரியான வேடங்களில், மீண்டும் நடிப்பீர்களா?
கண்டிப்பாக மாட்டேன். அந்த படத்தில் நடிக்கும்போது, எனக்கு சினிமாவைப் பற்றி, அதிகம் தெரியாது. அதனால், அப்படியொரு வேடத்தில் நடித்து அவப்பெயரை பெற்றேன். அதை நினைத்து, இப்போது கூட வேதனைப்படுகிறேன்.

* விஜயுடன் நடித்தாயிற்று, அஜீத்துடன் எப்போது?
அஜீத்துடன் கட்டாயம் நடிக்க வேண்டும். அவர் மட்டுமின்றி, அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர வேண்டும். அத்துடன், எதிர்காலத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதைகளிலும், நடிக்க வேண்டும்என்ற ஆர்வமும் உள்ளது.

No comments :

Post a Comment