காதலனை சந்திக்க இலங்கைக்கு சென்ற பூஜா

No comments
இலங்கை வரவான நடிகை பூஜா தன் காதலனை சந்திப்பதற்கு தாயகம் திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நான் கடவுள் படத்தில் கண் பார்வை இல்லாத பெண்ணாக நடித்த பூஜாவிற்கு அந்த படத்திற்கு பின்பு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை.'



  இதனால் சினிமா மீது வெறுப்படைந்த அவர் பெங்களூரில் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். அந்த சமயம் பார்த்து திடீரென்று ஒரு சிங்கள படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க தாயகம் சென்றார் பூஜா.

 ஆனால் அந்த படத்தில் நடித்து விட்டு இந்தியா திரும்பியபோது அவர் மட்டும் வரவில்லை. அவருடன் காதலும் சேர்ந்து வந்திருக்கிறது. சிங்கள படத்தில் நடித்து வந்தபோது அங்குள்ள நடிகர் ஒருவருக்கும், பூஜாவுக்கும் இடையே காதல் உருவாகியுள்ளதாம்.

 இதனைத் தொடர்ந்து பெங்களூரில் அவரால் தங்கியிருக்க முடியாமல் இனி இந்தியாவே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு பெட்டி படுக்கையுடன் இலங்கைக்கே சென்று காதல் ஜோதியில் கலந்து விட்டாராம் பூஜா.

No comments :

Post a Comment