மீண்டும் ஒரு தோல்வியை தரக்கூடாது : சூர்யாவின் தெளிவு

No comments
ஒரு படத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறார். இன்னொரு படத்தை கிட்டத்தட்ட டிராப்பே செய்துவிட்டார். சூர்யாவின் இந்த முடிவால் சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் மட்டுமல்ல, அவரது கால்ஷீட்டுக்கு காத்திருப்பவர்களும் குழப்பத்தில் உள்ளனர். ஆனால் சூர்யா தெளிவாக இருக்கிறார். 'அயன்', 'சிங்கம்' (முதல் பாகம்) படங்களின் ஹிட் அவரை உச்சிக்கு கொண்டு சென்றது.

அதன்பின் அவர் அதிகம் எதிர்பார்த¢த 2 மெகா பட்ஜெட் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை ருசிக்கவில்லை. அப்போது சூர்யாவின் ஸ்டார் பவர் லேசான ஆட்டம் கண்டது. அதுதான் சூர்யாவை சிந்திக்க வைத்திருக்கிறது. இனி ஹிட்தான், ஹிட் மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் அவர் இருக்கிறார். 'சிங்கம் 2' வெற்றிக்கு பிறகு அவருக்கு பொறுப்பும் கூடி இருக்கிறது. இதனால்தான் கவுதம் மேனன் சொன்ன 'துருவ நட்சத்திரம்' படத்தின் ஒன்லைனை ஓகே செய்தவர், முழு கதையும் கேட்டு படத்தை தள்ளிப்போட சொன்னார்.

 அந்த படம் கிட்டத்தட்ட டிராப் என்றே கூறப்படுகிறது. அதே போல் லிங்குசாமியின் திரைக்கதையிலும் நிறைய மாற்றங்கள் அவர் சொன்னதாக பேசப்படுகிறது. இதன்காரணமாக லிங்குசாமி பட ஷூட்டிங் தாமதமாகிறது. இதற்கிடையில் 'சூது கவ்வும்' பட இயக்குனர் நலன் குமாரசாமியின் கதையையும் சூர்யா ஓகே செய்திருக்கிறார். இது எல்லாமே மீண்டும் ஒரு தோல்வியை தரக்கூடாது என்பதில் சூர்யா கவனமாக இருப்பதை டார்ச் போட்டு காட்டுகிறது.

No comments :

Post a Comment