சினிமா, எப்­போ­துமே ஆணா­திக்கம் நிறைந்த உல­கம்: டாப்ஸியின் கோபம்!

No comments
‘ஆடு­களம்’ படத்தில், ‘வெள்ளாவி’ தேவ­தை­யாக அறி­மு­க­மா­னவர் டாப்சி. தற்­போது, ‘ஆரம்பம், கங்கா’ ஆகிய படங்­களில் இரண்டு கதா­நா­ய­கி­களில் ஒரு­வ­ராக நடித்து வரு­கிறார். இதைத் தொடர்ந்து, சில படத் தயாரிப்பாளர்கள், டாப்­சியை தொடர்பு கொண்­ட­போது, கதையில் தன் கதா­பாத்­தி­ரத்­துக்கு, முக்­கி­யத்­துவம்இல்லை என, தவிர்த்து விட்டார். 

 இது­பற்றி அவர் கூறு­கையில்,‘சினிமா, எப்­போ­துமே ஆணா­திக்கம்நிறைந்த உல­க­மா­கவே உள்­ளது. என்ன தான் நடி­கைகள் அழ­காக,திற­மை­யாக இருந்­தாலும், டூயட் பாட மட்­டுமே பயன்­ப­டுத்­து­கின்­றனர்.அது­மட்­டு­மின்றி, ஆண்கள், வழுக்கை விழுந்து, நரை விழுந்­தாலும், ஹீரோ­வா­கவே நடிக்­கின்­றனர்.


 நடி­கை­க­ளுக்கு திரு­ம­ண­மாகி விட்­டாலே, அண்ணி, அம்மா வேடங்­க­ளுக்கேஅழைக்­கின்­றனர்’ என்று தன் வேத­னையை வெளிப்­ப­டுத்தும் டாப்சி, சினி­மாவில் நடி­கை­க­ளுக்கும் முக்­கி­யத்­துவம் தர வேண்டும் என்­கிறார்.


No comments :

Post a Comment