அட்லியை பாராட்டிய உலகநாயகன்

No comments
‘ராஜா ராணி’ படத்தின் 25வது நாளை முன்னிட்டு உலகநாயனிடம் ஆசிர்வாதம் பெற்றுள்ளார் இயக்குனர் அட்லி. தன்னுடைய முதல் படமான ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தரமான காதல் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் என்ற முத்திரையை பதித்துள்ளார் அட்லி. 

 இன்று படத்தின் 25ஆம் நாளை முன்னிட்டு பத்மஸ்ரீ கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இதுகுறித்து அட்லி கூறுகையில், ராஜா ராணி படத்தை கமல் சார் தான் துவக்கினார். வெற்றி பெற்றதும் அவரிடமே ஆசி பெற வேண்டும், அவருக்கு இந்த வெற்றியை சமர்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

 என்னுடைய உழைப்பு அதன் பிரதி பலனாக கிடைத்த வெற்றி ஆகியவை பற்றி விவரமாக கேட்டு அறிந்தவர், படத்தின் சிறு நுணுக்கத்தையும் விசாரித்த போது அந்த மனிதரின் திரை உலக ஞானம் எவ்வளவு பெரியது என புரிந்தது.

 மேலும் இந்த உன்னதமான நேரத்தில் எனது தயாரிப்பாளர்கள் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், எ.ஆர்.முருகதாசின் தயாரிப்பு மற்றும் நெக்ஸ்ட் பிக் பிலிமஸ் நிறுவனத்தினருக்கு என் மனமார்ந்த நன்றி என்றும் என்னுடைய படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகையர் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள் எனவும் கூறியுள்ளார். 

No comments :

Post a Comment