ஈகோ

No comments
வேலுவும், பாலாவும் திருடர்கள். வேலுவின் அக்காவுக்கு லட்சக் கணக்கில் பணம் தேவைப்படுகிறது. அதை ஓர் இடத்தில் திருடிக் கொண்டு அக்காவை காண வேலுவும், பாலாவும் ரயிலில் செல்கிறார்கள். அதே ரயிலில் ஹீரோயின் அனஸ்வரா, தன் காதலனை தேடிச் செல்கிறார். தன் அம்மா தனக்கு கொடுத்த ஒரு சென்டிமென்ட் மோதிரத்தை காதலனிடம் கொடுத்து தன் வீட்டில் பெண் கேட்க அனுப்ப வேண்டும் என்பது அவரது திட்டம்.

 ரயிலில் நடக்கும் குட்டி கலாட்டாவில் அனஸ்வராவின் மோதிரம் வேலுவிடமும், வேலுவின் பணம் அனஸ்வராவிடமும் கைமாறுகிறது. மோதிரத்தை எடுத்துக் கொண்டுபோய் அனஸ்வராவின் வீட்டில் கொடுத்து, தனது பணப் பையை வாங்கச் செல்கிறார்கள் வேலுவும், பாலாவும். அனஸ்வராவின் குடும்பம் அவளது காதலனை எதிர்பார்த்து தீட்டிய அரிவாளோடு நிற்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதை கிச்சு கிச்சு மூட்டிச் சொல்கிறார்கள்.

ஈஸ்வர், கோமதி என்பதன் சுருக்கம்தான் ஈகோ. திருடன் கேரக்டருக்கு அப்பாவியாக இருக்கும் வேலுவின் தோற்றம் பொருந்தவில்லை. இருந்தாலும் காமெடியால் சமாளிக்கிறார். நண்பனாக வரும் பாலா சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். பல இடங்களில் பேசிப்பேசியே பல்பு வாங்குகிறார். வீட்டை விட்டு தப்பிக்க இவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் காமெடியாக முடிவது டிராமா.வேலு, அனஸ்வரா கன்னத்தில் அறைய, திடீரென்று அனஸ்வராவின் தங்கை அங்கு வர, தன் கன்னத்தில் கைவைத்து அவள் தன்னை அடித்ததாகத் திருப்பி விடுவது, அப்பா சென்டிமென்டுக்கு அடிமையான அனஸ்வராவின் அப்பாவை, அப்பா என்று அழைத்து அமுக்குவது என ஆங்காங்கே வரும் சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் படத்தை கொஞ்சமேனும் தாங்கிப் பிடிக்கிறது. 

 ஹீரோயின் மாதிரி இருக்க மாட்டாங்க. ஆனா படத்துல இவங்கதான் ஹீரோயின் என்று அனஸ்வரா பற்றி படத்திலேயே இன்ட்ரோ கொடுத்து விடுகிறார்கள். நடிக்க வாய்ப்பு குறைவு. ஆனாலும் நிறைவாகச் செய்கிறார். சில காட்சிகளில் கேரக்டர்கள் வளவளவென பேசிக் கொண்டே இருக்க, அனஸ்வரா ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் மாதிரி ஓரமாக நின்று கொண்டிருப்பதுதான் கொடுமை. காதலனுக்காக வீட்டை விட்டே ஓடியவர். 

ஒரு கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை என்பதற்காக காதலை பிரேக் பண்ணுவதும், திருடன் என்று தெரிந்தும் இன்னொருவனை காதலிப்பதும் எந்த ஊர் லாஜிக்கோ தெரியவில்லை. அதுவும் அனஸ்வரா-வேலு காதலை நான்கைந்து ஸ்டில், பாலாவின் வாய்ஸ் ஓவரிலியே சொல்லிவிடுகிறார்கள். கலகலவென ஒரு காமெடி படத்தை தர முயற்சித்திருக்கிறார்கள்.

No comments :

Post a Comment