தற்போதைய நடிகர்களில் எனக்கு பிடித்த ஒரே நடிகர் விஜயசேதுபதி! - சொல்கிறார் கேயார்

No comments
தற்போதைய புது வரவு நடிகர்களில் எனக்கு அதிகமாக பிடித்த ஒரே நடிகர் விஜயசேதுபதிதான் என்கிறார் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார். புதுமுகங்கள் நடித்த அலையே அலையே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை வடபழனியிலுள்ள ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் வி.சி.குகநாதன், கேயார், சீனுராமசாமி, விஜயசேதுபதி, இசையமைப்பாளர் இமான், ஞானவேல்ராஜா, டி.சிவா, ஜாகுவார் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
 இவ்விழாவில் பேசிய ஞானவேல்ராஜா, டி.சிவா ஆகியோர், தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் எங்கள் அணி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்டிருந்த வழக்கு நேற்றோடு முடிவுக்கு வந்தது. 
அந்த வகையில், நேற்றோடு தமிழ் சினிமாவை பிடித்திருந்த சனியன் விலகியது. அதனால் இதுவரை எந்த விசயத்தையும செயல்படுத்த முடியாமல் இருந்த நாங்கள் இனி அதிரடியாக செயல்படப்போகிறோம் என்று காரசாரமாக பேசினார்கள். அதையடுத்து கேயார் பேசுகையில், தயாரிப்பாளர் சங்கம் இப்போது புத்துயிர் பெற்றிருக்கிறது. 
அதனால் இனி ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடப்போகிறோம் என்று ஆரம்பித்தவர், ஈகோ இல்லாமல் சினிமா வளர அனைவருமே பாடுபடுவோம் என்றார். பின்னர், விழாவுக்கு வந்திருந்த விஜயசேதுபதியை உயர்வாக பேசினார். குறிப்பாக, இன்றைய புதுவரவு நடிகர்களில் எனக்கு பிடித்த ஒரே நடிகர் அவர் மட்டுமே. அவர் இப்போதே பெரிய அளவில் வளர்ந்து விட்டார். ஆனால் அவரது நல்ல மனதுக்கு அவர் இன்னும் வளர்ந்து கொண்டேயிருப்பார். 
 மேலும்,. இன்றைய நிலையில், ஒரு ஆடியோ விழாவுக்கு கமல், சூர்யா போன்ற நடிகர்கள் வருவது அந்த படங்களுக்கு கோடிக்கணக்கான பப்ளிசிட்டிக்கு சமமாகிறது. அந்த வகையில், இந்த விழாவுக்கு விஜயசேதுபதி வந்திருப்பதும் படத்திற்கு பெரிய பப்ளிசிட்டிதான். இந்த மாதிரி நல்ல மனம் கொண்ட நடிகர்களால் தமிழ் சினிமாவின் வளர்ச்சி எதிர்காலத்தில் மிகப்பெரிய உயரத்துக்கு செல்லப்போகிறது என்றார்.

No comments :

Post a Comment