ஆண் மகனை பெற்றெடுத்த பூமிகா

No comments
நடிகை பூமிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நடிகை பூமிகா தமிழில் பத்ரி, ரோஜா கூட்டம், சில்லுன்னு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இந்தி, தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார். பூமிகாவுக்கும், யோகா பயிற்சியாளர் பரத் தாகூருக்கும் அக்டோபர் 2007ம் ஆண்டில் திருமணம் நடந்தது. பல வருடங்களுக்கு பிறகு இப்போது பூமிகாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. 
இதனை பூமிகாவும் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து பூமிகா கூறுகையில், எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். பரத் தாகூரும் சந்தோஷமாக உள்ளார். 
ஆனந்த பெருக்கால் விழிகளில் கண்ணீர் வந்தது. குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சி விரைவில் நடக்க உள்ளது. இதில் சக நடிக, நடிகையர் மற்றும் நண்பர்கள் பங்கேற்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

No comments :

Post a Comment