மீண்டும் ஆளும்கட்சியின் கோபத்துக்கு ஆளான வடிவேலு!

No comments
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பணத்தை பெற்றுக் கொண்டு தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார் வடிவேலு. தி.மு.க. தோற்று அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது வடிவேலுவுக்கு ஆன்ட்டி க்ளைமாக்ஸ் ஆனதால், திரையுலகிலிருந்து ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்பட்டார். ஏறக்குறைய மூன்று வருடங்களை நெருங்கிவிட்டநிலையிலும் ஆளும்கட்சியிடமிருந்து வடிவேலுவுக்கு பாவமன்னிப்பு கிடைக்கவில்லை. அ.தி.மு.க. அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மதுரை ஏரியாவைச் சேர்ந்த அமைச்சர்கள் பலர் தனிப்பட்டமுறையில் வடிவேலுவுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள்.
 அவர்களின் நெருக்கத்தைப் பயன்படுத்தி எப்படியாவது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துவிட கடந்த சில வருடங்களாகவே முயற்சி செய்தார் வடிவேலு. அவரது இந்த முயற்சி நிறைவேறாமல் இழுத்துக்கொண்டே போக, எப்படியும் ஜெயலலிதாவை சந்திக்க வைத்துவிடுவதாக அமைச்சர்கள் வடிவேலுவுக்கு ஆறுதல் சொல்லி வந்தனர். அவர்கள் சொன்னதை நம்பித்தான், ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்திலேயே நடிக்க முடிவு செய்தார் வடிவேலு.
 தற்போது ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் இசைவெளியீட்டுவிழா நடைபெறவிருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதியும் நெருங்கிவிட்ட நிலையிலும் கூட ஜெயலலிதாவை சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கிடைக்கவில்லை. எனவே, ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை ஆளும்கட்சி டி.வி.க்கு இலவசமாகக் கொடுக்கவும் தயாரானார்கள். அப்படி கொடுப்பதன் மூலம் ஜெயலலிதாவின் கோபத்தைக் குறைத்து, அவரின் குட் புக்கில் வடிவேலு இடம் பிடித்துவிடலாம் என்று கணக்குப் போட்டனர். 
 இந்த டீலுக்கு சேனல் தரப்பிலிருந்து பாசிட்டிவ்வான ரியாக்ஷன் வரவில்லை. எனவே மேலும் காத்திருப்பது வீண் வேலை என்று முடிவுக்கு வந்து, ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை நான்கரை கோடிக்கு வேறு ஒரு டி.வி.க்கு விற்றுவிட்டனர். இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட ஆளும்கட்சி தரப்பு வடிவேலு மீது கூடுதல் கடுப்பில் இருக்கிறதாம். அச்சச்சோ…வடை போச்சே..!

No comments :

Post a Comment