ஆஸ்கார் விருது கனவில் வித்யா பாலன்

No comments
ஆஸ்கார் விருது பெறும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார். அவுஸ்திரேலிய தலைநகர் மெல்போர்னில் வரும் மே மாதம் 1ம் திகதி முதல் 11ம் திகதி வரை நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவுக்கான படங்களை தெரிவு செய்யும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இவ்விழாவுக்கான இந்திய திரைப்பட உலகின் தூதராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை வித்யா பாலன் திரைப்பட விழாவில் பங்கேற்கும் இந்திய படங்களின் பெயர்களை இந்நிகழ்ச்சியில் அறிவித்தார். 
 அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எனது நடிப்பில் சமீபத்தில் வெளியான ’ஷாதி கே சைட் எஃபெக்ட்ஸ்’ படத்துக்கு ரசிகர்கள் அளித்துள்ள வரவேற்பு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. ஆரம்பம் முதல் ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு பிரமிக்கத்தக்கது. ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதையே நான் விரும்புகிறேன். ஆஸ்கார் விருதை வாங்க வேண்டும் என்று நான் நினைத்துப் பார்த்ததே கிடையாது. அதேபோல், பத்மஸ்ரீ விருது வாங்குவேன் என்றும் நினைத்துப் பார்த்ததே கிடையாது. 

 ஆனால், கடவுளின் தயவால் பத்மஸ்ரீ விருது எனக்கு கிடைத்தது. இதேபோல், ஆஸ்கார் விருது வாங்கும் நாளும் இன்னும் அதிக தூரத்தில் இல்லை என்று கூறியுள்ளார்.

No comments :

Post a Comment