ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நடிகை மனோரமா உடல் நிலையில் முன்னேற்றம்

No comments
நடிகை மனோரமாவுக்கு நேற்று முன்தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சு விடவும் திணறினார். இதையடுத்து ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். செயற்கை சுவாசமும் பொறுத்தப்பட்டது. உடல் நிலை கவலைக்கிடமாகவே இருந்தது. உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினார்கள். மாலையில் இவரது உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனாலும் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பிலேயே அவர் வைக்கப்பட்டு உள்ளார்.
 தொடர்ந்து சில நாட்கள் ஆஸ்பத்திரியிலேயே அவர் இருப்பார் என தெரிகிறது. மனோரமாவுக்கு ஏற்கனவே மூட்டு வலி இருந்தது. அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment