ஆமாம்.. அதில் நானும் ஒருவர்! கலங்கிய நடிகை கவுதமி...
பிரபல நடிகையான கவுதமி சென்னை விமான நிலையத்தில் நடந்த மார்ப புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டார்.
இந்த விழாவிற்கு தலைமை தாங்கிய இவருடன் நடிகை பூர்ணிமா பாக்யராஜ், சவுமியா அன்புமணி, சியாமவுலி சாஸ்திரி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் கலந்து கொண்ட நடிகை கவுதமி பேசுகையில், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதால் புற்றுநோயை தடுக்கலாம்.
தற்போது புற்றுநோயை குணப்படுத்த மருந்துகளும், பல்வேறு சிகிச்சை முறைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் நானும் ஒருவர் தான்.
பெண்கள் ஆரம்ப கட்டத்திலே புற்றுநோய் தாக்கத்தை கண்டுபிடித்து உடனடி சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a comment